Pages

Thursday, August 26, 2010

girivalam

எனது பெருமதிப்பிற்குரிய ஐயாவும்,மானசீககுருவுமாகிய டாக்டர் பி.எஸ்.பி.அவர்களின் பல ஜோதிடக்கட்டுரைகளை நான் பல ஜோதிட மாத இதழ்களில் தொடர்ந்துவாசித்துவருகிறேன்.அவர்களின் ஒரேயொரு ஆன்மீக வழிகாட்டுதலால்தான் திருவண்ணாமலையின் பெருமைகளை அறிந்தேன்.




அவர்கள் கி.பி.2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த ஜோதிடபூமியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள்.



ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரியன்று வானுலகிலிருந்து பூலோகத்திற்கு(நமது பூமிக்கு) குபேர பகவான் வருகிறார்.அன்று தினப்பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் குபேரலிங்கத்திற்கு பூஜை செய்கிறார்.



பூஜையை முடித்து அன்று மாலை 6.00 மணிக்குமேல் குபேர பகவான் கிரிவலம் செல்கிறார்.

நாமும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரியன்று திருவண்ணாமலைக்கு வந்து மாலை 4.30 மணிக்கு குபேரலிங்கத்தை வந்தடைவோம்;மாலை 6.00 மணி வரை குபேரலிங்கத்திடம் நமது வேண்டுதல்கள்,கோரிக்கைகள்,பொருளாதார வளங்களைப் பற்றி வேண்டுவோம்;

மாலை 6.00 மணிக்கு மேல் குபேரலிங்கத்திலிருந்து கிரிவலம் புறப்படுவோம்.இதன்மூலம்,திரு அண்ணாமலையின் அருளும்,சித்தர்களின் ஆசியும்,குபேர சம்பத்தும் பெறுவோம்

Wednesday, August 25, 2010

sathuragiri

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக, சற்று சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்