Pages

Thursday, November 18, 2010

சதுரகிரி மலை.

துரகிரி மலை.

சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் த‎ன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களி‎ன் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களி‎ன் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளி‎ன் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவி‎ன் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவ‎ன்மலை எ‎ன்றும் மகாலிங்க மலை எ‎ன்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் எ‎ன்றும் அழைக்கப்படுகிறது.

Sathuragiri

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களி‎ன் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுட‎ன் மக்களி‎ன் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ள‎னர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களி‎ன் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி ‏இங்கு வருகின்றனர்.

அமைவிடம்

சதுரகிரி, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் வத்றாப் என அழைக்கப்படும் வத்திறாயிருப்பு அரு‏கில் உள்ள தாணிப்பாறையில் உள்ளது. வத்றாப்பிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும், வத்றாப் விலக்கிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும் தாணிப்பாறை அமைந்துள்ளது.

Sathuragiriதெ‎ன்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும், கொய்யாத் தோப்புகளும் சூழ தாணிப்பாறை ரம்மியமாய் காட்சியளிக்கும். மலையி‎‎ன் அடிவாரத்திலிருந்து ஏறக்குறைய எட்டு கிமீ தூரத்தில் உச்சியில் மகாலிங்கம் ச‎ன்னதி அமைந்துள்ளது. ஒரு மலையல்ல, இரு மலையல்ல.. ஏழு மலைகளைக் கடந்துதா‎ன் கோவிலைச் சென்றடைய முடியும்.

‎மலைகள் சுற்றிலும் சதுர வடிவில் அமைந்த படியால் சதுரகிரி எ‎ன்று பெயர்பெற்றதாகவும் சொல்கிறார்கள். நா‎ன்கு பெரிய மலைகள் கோவிலைச் சுற்றிலும் அரண் போல் அமைந்திருப்பதாலும் அவ்வாறு பெயர் பெற்றதாகச் சொல்வதும் உண்டு. ‘சதுர’ எ‎ன்றால் நா‎ன்கு, ‘கிரி’ எ‎ன்றால் மலை.

சுற்றிலும் பெரிய மலைகள் இருந்தாலும் சிறு சிறு கிளை மலைகளும் உண்டு. ‏இவற்றையெல்லாம் தாண்டித்தா‎ன் மேலே செல்ல வேண்டும். ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் இடைப்பட்ட பகுதி காட்டாற்றி‎‎ன் போக்கிடமாக உள்ளது

Tuesday, November 9, 2010

thiruvannamalai girivalam

திருஅண்ணாமலை கிரிவலம் நமக்கு உணர்த்துவது என்ன?

திருஅண்ணாமலை கிரிவலம் நமக்கு உணர்த்துவது என்ன?
நீங்கள் திருஅண்ணாமலை கிரிவலம் செல்வது உங்களைப்பொறுத்தவரையில் சாதாரண சம்பவம்;ஆனால்,உங்களை வரவழைப்பதற்காக உங்களுடைய முன்னோர்களாகிய பித்ருக்கள் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து இந்த தெய்வீக நல்வாய்ப்பை நமக்கு வழங்கியுள்ளனர்.

நமக்கு ஒரு ஆன்மீககுரு இந்தப்பிறவியில் அமைந்துவிட்டால்,நமது 3000 முந்தைய மனிதப்பிறவிகளாக சிறிதுசிறிதாக புண்ணியம் செய்திருக்கிறோம் என்றே பொருள்.இந்தப்பிறவியிலேயே நமக்கு குரு அமைய வேண்டும் எனில்,வியாழக்கிழமைகளில் கிரிவலம் சென்று கொண்டேஇருக்க வேண்டும்.

முதன்முறையாக திருஅண்ணாமலை கிரிவலம் செல்லும்போது சிலருக்கு நடைபயணம் கடுமையாக இருக்கும்;பலருக்கு நடைபயணம் சுலபமாக இருக்கும்.கிரிவலத்தின்போது எக்காரணம் கொண்டும் கெட்ட வார்த்தைகள் பேசாதீர்கள்;அந்தப்பாவத்தை எங்கேயும் கொண்டுபோய் கரைக்க முடியாது.

கிரிவலம் செல்வதற்கு ஏற்ற நாட்கள் பவுர்ணமி என நம்புகிறோம்.அதைவிடவும் அமாவாசையும்,அதைவிடவும் மாத சிவராத்திரியும் மிகச்சிறந்ததாகும்.கிரிவலம் செல்லும் முறைகள் மட்டுமே 1,00,008 முறைகள் இருக்கின்றன.அவற்றில் ஒரு சில முறைகளைத்தவிர,மற்றவைகளை நம்மால் பின்பற்றுவது பிரம்மபிரயத்தனம் ஆகும்.

தற்காலத்தில்தான் கிரிவலப்பாதையின் நீளம் 14கிலோ மீட்டர்கள்.சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு 54 கிலோ மீட்டர்களாகவும்,சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு 80 கிலோ மீட்டர்களாகவும் இருந்திருக்கின்றன.

எந்த வித பக்தியும் இல்லாமல்,சும்மா ஒருமுறை கிரிவலம் சென்றுவிட்டு அண்ணாமலை கோவிலுக்குள் செல்லாமல் நேராக நமது வீட்டுக்குச் சென்றாலே கிரிவலம் சென்றதற்கான புண்ணியம் கிடைத்துவிடுகிறது.ஒரே ஒரு கிரிவல விதி என்ன வெனில்,கிரிவலத்தை எந்த இடத்திலிருந்து துவங்கினோமோ,அதே இடம் வரை கிரிவலம் சுற்றிவந்தால்தான் கிரிவலம் முழுமை பெறும்.

உதாரணமாக,குபேரகிரிவல நாளன்று குபேரலிங்கத்தில் ஆரம்பித்து,குபேரலிங்கத்தில் கிரிவலப்பயணத்தை முடிக்க வேண்டும்.தற்காலத்தில்,பவுர்ணமிநாட்களில் பேருந்தினை கோவிலிலிருந்து ஓரிரு கிலோ மீட்டர்கள் தூரத்திலேயே நிறுத்திவிடுகிறார்கள்.ஆக,அந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து கிரிவலம் புறப்பட்டு,அதே இடத்தை வந்தடைந்தாலே கிரிவலம் முழுமை பெற்றதாக அர்த்தம்.
கார்த்திகை மாதம் வரும் பவுர்ணமியான திருக்கார்த்திகையன்று,திரு அண்ணாமலையிலிருந்து சில கிலோ மீட்டர்கள்தூரத்திலேயே பேருந்தை நிறுத்திவிடுகிறார்கள்.ஆக,கூட்டத்தில் கரைந்துபோகும் நாம் எந்த இடத்தில் கிரிவலப்பாதையைத்  தொடுகிறோமோ,அந்த இடமே கிரிவலத்தின் ஆரம்பமுனையாக நினைத்து,கிரிவலம் சுற்றி அதே இடத்தில் முடிக்க வேண்டும்.இது பாவம் அல்ல;இதைத்தான் அருணாச்சலபுராணம் விவரிக்கிறது.அருணாச்சலபுராணத்தில், “எங்கு கிரிவலம் ஆரம்பிக்கிறோமோ,அதே இடத்தில் முடிக்க வேண்டும்”.

சித்திரைமாதம் வரும் பவுர்ணமியன்று,திருஅண்ணாமலையின் கிழக்குக் கோபுரத்தில் இருந்தவாறே பசு நெய்,தாமரைத்தண்டுத்திரியினால் அகல்விளக்கு ஏற்றி அதை உயர்த்திப்பிடித்து, தீபத்துடன் அண்ணாமலையை தரிசித்து கிரிவலம் துவங்க வேண்டும்.கிரிவலத்தின் போது புனிதமான பூக்களை தானமளித்து,பூத நாராயணர் திருக்கோவிலில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.வசதியுள்ளவர்கள் 12 விதமான உணவுவகைகளை தானமளித்தவாறு கிரிவலப்பயணம் மேற்கொள்ளுவது நன்று.
அவையாவன:1.எலுமிச்சை சாதம்
            2.சர்க்கரைப் பொங்கல்
            3.மாங்காய் சாதம்
            4.தேங்காய் சாதம்
            5.புளியோதரை
            6.தயிர்ச்சாதம்
            7.அவல் உப்புமா
            8.அரிசி உப்புமா
            9.கோதுமை உப்புமா
           10.கறிவேப்பிலை சாதம்
           11.வெண் பொங்கல்
           12.பருப்புச் சாதம்


வைகாசி மாதப் பவுர்ணமியன்று  கிரிவலம் வருவதால், சனி தசை,புக்தி,மகாதிசை காலங்களில் ஏற்படும் துன்பங்களுக்குத் தக்கப் பரிகாரங்கள்கிடைத்துவிடும்.

முறையாகக் கிடைக்க வேண்டிய வேலை,பதவி உயர்வு,பணி அந்தஸ்து கிடைத்துவிடும்;

சுவாசம் சார்ந்த நோய்கள் விலகும்;

பல காலமாக யாராலும் கண்டுபிடிக்க முடியாத தவறுகளை மனதால் நினைத்து வேண்டிட வேண்டும்.முடிந்தால் நம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்திடல் வேண்டும்.இதனால்,பாவம் நீங்கிவிடும்.

ஆனிமாத பவுர்ணமியன்று செல்வத்தின் அதிபதி கிரிவலம் வருகிறார்.எனவே,செல்வச் செழிப்பை விரும்புவோர்,ஆனிபவுர்ணமிகிரிவலம் வருவது நன்று.இந்த ஆனிமாத பவுர்ணமியன்று பிருங்கிமுனிவரின் தோளில் அமர்ந்து குபேரபகவான் கிரிவலம் வருவதாக ஐதீகம்.எனவே, இம்மாதகிரிவலம் செல்வோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை ஒன்றை தோளில் வைத்து கிரிவலம் சென்றால்,16 செல்வங்களும் குழந்தைபாக்கியமும் கிடைக்கும்.
பேரக்குழந்தையை  அல்லது உறவினர்/நண்பர்களின் அனுமதியோடு அவர்களின் ஐந்துவயதுக்குட்பட்ட குழந்தையை தோளில் சுமந்து கிரிவலம் வரவேண்டும்.

இன்று முழுவதும் வில்வ இலை ஊறிய நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருந்து ஐந்துவயதிற்குட்பட்ட குழந்தையை தோளில் சுமந்து கிரிவலம் வர சகல சம்பத்துகளும் உண்டாகும்.சிலருக்கு குபேரபகவானின் தரிசனமும் கிட்டும்.

உங்கள் குழந்தைகள் பருவ வயதில் தடம்மாறிச் சென்றுவிட்டார்கள் எனவருந்துகிறீர்களா? ஆனிமாத பவுர்ணமியன்று கிரிவலம் நீங்கள் வந்தால் உங்களது குழந்தைகள் மனம் மாறி நல்லொழுக்கத்துடன் வாழத்துவங்குவர்.

சிலர் தமது வயதான பெற்றோர்களை கவனிப்பதில்லை;சொத்தினை அடாவடி செய்து பிடுங்கி,அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது உண்டு;அல்லது வீட்டை விட்டு துரத்தி விடுவதும் உண்டு.பெற்றோர்கள் கடும்மன வேதனையடைந்தால் அது பித்ரு தோஷமாக மாறி சீரான வாழ்க்கையை சீர்குலைத்துவிடும்.இதற்கு பிராயசித்தமாக ஆனிமாத பவுர்ணமி கிரிவலம் செல்வது அமைந்திருக்கிறது.


தைமாதம் வரும் பவுர்ணமியன்று கிரிவலம் சென்றால்,உங்கள் குழந்தைகளின் மந்தகுணம் மாறும்;கல்வியில் கவனம் செலுத்தி பொறுப்புள்ளவர்களாக மாறுவார்கள்.இதற்கு நீங்கள் உங்களுடைய குழந்தைகளுடன் கிரிவலம் வர வேண்டும்,

12 தை பவுர்ணமிகளுக்கு தைமாத பவுர்ணமிகிரிவலம் வந்து,அப்படி வரும்போது கிரிவலப்பாதையில் கீரை வடையை தானம் செய்தால்,சிறுவயதில் உங்களைவிட்டு காணாமல் போன உங்களுடையரத்த உறவு தானாகவே தேடிவரும்.

பிரண்டை துவையல் கலந்த சாதத்தை தைமாத பவுர்ணமியன்று கிரிவலம் செல்லும்போது அன்னதானமாக அளித்து வந்தால்,தடம் மாறிப்போன கணவன் அல்லது அப்பா மனம் மாறி தீயஒழுக்கங்களைக் கைவிட்டு,பொறுப்புள்ள குடும்பஸ்தராக மாறிவிடுவார்.

நமது எந்த வித பூர்வஜன்ம கர்மவினையாக இருந்தாலும் பவுர்ணமி கிரிவலம் அதை கரைத்துவிடும்.

மாசிமாதம் வரும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்லுவதால் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள்,மின் அணுத்துறையில் பணிபுரிவோர்கள்,நீதித் துறையில் இருப்பவர்கள் நியாயமான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவிகள் மாசிபவுர்ணமியன்று கிரிவலம் வருவதால்,கணவனின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.
கொடுத்த கடனை திருப்பிப் பெறமுடியாமல் நொடித்துபோனவர்கள் மாசிபவுர்ணமி கிரிவலத்தால் அதிலிருந்து மீளமுடியும்.
கலப்படம் செய்வதையே தொழிலாக வைத்திருப்போர்,பிறருடைய சொத்துக்களை அபகரித்திருப்போர்,அலுவலகப் பொருட்களை வீட்டில் பயன்படுத்துவதால் குடும்பத்தலைவரின் அல்லது குடும்பத்தலைவியின் ஆயுள் குறையும்;அதே சமயம் வீட்டுக்கடன் அதிகரிக்கும்;அதை தீர்க்கமுடியாது.இதுபோன்ற பாவங்களை நிவர்த்திசெய்ய மாசிமாத பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வது அவசியம்.

மாசி மாத பவுர்ணமி கிரிவலத்தின்போது வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியைப் பார்த்தால்,உங்களுடைய பல நூறு மனிதப்பிறவிகளின் கர்மங்கள் உடனே தொலைந்ததாக அர்த்தம்.

பங்குனி மாதம் வரும்பவுர்ணமியன்று கிரிவலம் செல்வது மிகவும் விஷேசமானது ஆகும்.
உங்களுக்கு நிரந்தரமான நிம்மதியான செல்வ வளம் கிடைக்க வேண்டுமெனில்,ஏராளமான சம்பங்கிப்பூக்களை சுமந்தவாறு,கிழக்குக்கோபுர வாயில் நிலைப்படியில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சண விநாயகரை தரிசித்துவிட்டு,திருஅண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இந்ததரிசனத்திற்கு லட்சண திருமுக தரிசனம் என்று பெயர்.இந்தத் தரிசனம் நம்மை தூய செல்வத்திற்கு சுத்திகரிக்கும்தரிசனம் ஆகும்.அதன் பிறகு,மகாலட்சுமியின் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டு கிரிவலம் செல்ல வேண்டும்.

எமலிங்கத்தின் அருகில் இருக்கும் எமதீர்த்தத்தில் நீராட வேண்டும்.இயலாவிட்டால் எமதீர்த்தத்தை தலையில் தெளிக்கவேண்டும்;சம்பங்கிப்பூக்களால் எமலிங்கத்தை அர்ச்சனை செய்து பிரசாதமாக அதே சம்பங்கிப்பூக்களை பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு,எமலிங்கத்தின் வாசலில்நின்று அண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இதற்குஒளதும்பர தரிசனம் என்றுபெயர்.இந்த தரிசனம்,நமக்குக்கிடைக்கும் மாபெரும் செல்வத்தை நன்முறையில் பயன்படுத்துவதற்கான தீர்க்காயுளைப்பெறவைக்கும்.அப்படிப் பெற்றப்பின்னர், கிரிவலத்தைத் தொடரவேண்டும்.

கிரிவலப்பாதையில் செங்கம்சாலையிலிருந்து வலதுபுறம்திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இப்படிதரிசனம் செய்வதற்கு பரஞ்ஜோதி திருமுகதரிசனம் என்று பெயர்.இந்த  தரிசனம் செய்யும்போதே நமக்கு தகுதியிருந்தால்,பலவிதமான சூட்சும காட்சிகளைக் காணமுடியும்.


குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து திருஅண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இதற்கு வைவஸ்வத லிங்கமுகதரிசனம் என்று பெயர்.அஷ்டமுக திக்கு தரிசனங்களில் இது மிகவும் முக்கியமான தரிசனம் ஆகும்.

தொடர்ந்து வந்து,பூதநாராயணப்பெருமாளிடம் கிரிவலத்தை முடிக்க வேண்டும்.பூதநாராயணப்பெருமாளிடம் நமதுப் பொருளாதாரப்பிரார்த்தனைகளை வைக்க வேண்டும்.இங்கிருந்தும்,திருஅண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இந்த தரிசனத்திற்கு சத்தியநாராயண தரிசனம் என்றுபெயர்.


இப்படி இரண்டு ஆண்டுகளில் ஆயிரம் முறை
கிரிவலம் செல்ல வேண்டும்.இப்படி செய்தால்,மாபெரும் செல்வ வளம் உங்களைத்தேடி வரும்.

Monday, October 25, 2010

பர்வதமலை

சக்தி திருஅண்ணாமலை எனப்படும் பர்வதமலை


தென்கையிலாயம் எனப்படும் பர்வதமலை

பருவ விடுமுறை கிடைத்ததால் ஐப்பசி மாத பவுர்ணமிக்கு திருஅண்ணாமலைக்கு நண்பர்களுடன் சென்றுவந்தேன்.நண்பர்களின் அழைப்பின் பேரில் திருஅண்ணாமலையின் அருகில் இருக்கும் பர்வதமலைக்குச் சென்றுவரலாம் என முடிவெடுத்தேன்.ஐப்பசிமாத பவுர்ணமி 22.10.2010 வெள்ளிக்கிழமையன்று வந்தது.கிரிவலம் செல்லும்போது ஓம்சிவசிவஓம் என்ற மந்திரத்தை ஜபித்தவாறு சென்றுவந்ததில் பரம சந்தோஷம்.

24.10.2010 ஞாயிற்றுக்கிழமையன்று நண்பர்களின் இருசக்கர வாகனத்தில் பர்வத மலையைச் சென்றடைந்தோம்.வாசலில் பச்சையம்மாள் காவல் தெய்வமாக இருந்தாள்.அவளது கோவிலின் வாசலில் ஏழு முனிகள் அமர்ந்திருந்தனர்.(சிலைகள் அப்படியே முனீஸ்வரனை அடையாளப்படுத்தின).ஒரே இடத்தில் ஏழு முனீஸ்வரர்கள் இருக்க மாட்டார்களே? என மனதில் தோன்றியது.

பச்சையம்மாளின் ஆசியோடு,மலையடிவாரத்தில் இருக்கும் வீரபத்திரரையும் வழிபட்டு மலையேறத்துவங்கினால் பாதி தூரத்திற்கு அழகாக படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன.ஆனாலும் அந்த படிக்கட்டுகளைக் கடப்பதற்கே மூச்சு வாங்கியது;காரணம் மலையின் அமைப்பு அப்படி!!!நெட்டுக்குத்தாக மலை அமைந்திருக்கிறது.
பாதிதூரம் கடந்ததும்,கரடுமுரடான மலைக்காட்டுப்பாதை துவங்குகிறது.அதில் பாதிதூரம் சென்றதும்,வெறும் மொட்டைமலை நெடுநெடுவென செங்குத்தாக உயர்ந்ந்ந்து நிற்கிறது.மாபெரும் திரிசூலங்களும்,ஆணிகளும்,தண்டுக்கால் கம்பிகளுமே நம்மை மேலேபயணிக்க உதவுகின்றன.

ஒவ்வொரு வளைவிலும் மலையடிவாரம் விதவிதமான கோணத்தில் கண்கொள்ளாக் காட்சியாக தெரிகிறது.

கடப்பாறைப்படி,தண்டவாளப்படி,ஏணிப்படி,ஆகாயப்படி என விதவிதமான பெயர்கள் அந்த வளைந்த பாதைகளுக்குப் பெயராக அமைந்திருக்கின்றன.

கோவிலைச் சென்றடைந்தால் பூசாரியே இல்லை;நாமாகத் தான் பூஜை செய்ய வேண்டுமாம்.அட!
ஒரு புராணக்கதையை இங்கே சொல்லியே ஆக வேண்டும்.நமது அம்மா அப்பாக்களுக்கு இந்தக்கதைதெரிந்திருக்கும்.

ஒருமுறை சிவபெருமானின் கண்களை பார்வதி விளையாட்டாக பொத்தினாள்.அப்படி பொத்தியது சில நொடிகள்தான்.அதற்குள் பூமியில் பலகோடி வருடங்கள் ஓடிவிட்டன.விஷயமறிந்த சிவபெருமான் உடனேதனது நெற்றிக்கண்ணைத் திறந்துவைத்து பூமிக்கும்,பிரபஞ்சத்துக்கும் ஒளி கொடுத்து காப்பாற்றிவிட்டார்.அதனால்,சிவபெருமான் பார்வதியை நீ பூமிக்குப்போய் என்னை நினைத்து கடும்தவம் செய்;அதுதான் உனக்குத் தண்டனை! என அனுப்பியிருக்கிறார்.
அதற்குப் பார்வதி , “உங்களை விட்டுப்பிரிந்து என்னால் ஒரு கணம் கூட இருக்க முடியாது.நான் எப்படி?”எனக்கேட்டிட,பார்வதியின் துணைக்கு ஏழு சித்தர்களைஅனுப்பி வைத்திருக்கிறார்.அவர்களின் அகத்தியர்,பராசாசர் உள்ளிட்டோர்தான் பச்சையம்மனின் வாசலில்முனியாக அமர்ந்திருக்கின்றனர்.

முன்பே,பூ,பழங்கள்,பத்தி,கற்பூரம்,மஞ்சள் வாங்கியே சென்றதில்,வழியில் ஆஞ்சநேயர்களின் மிரட்டலால் பழங்களைகொடுத்துவிட்டே மேலேபயணிக்க முடிந்தது.

மேலே மூலஸ்தனத்தைப் பார்த்தால்,ஸ்ரீமல்லிகார்ஜீனசுவாமியாக சிவபெருமானும்,ஸ்ரீபிரம்மராம்பிகைதாயாராகபார்வதியும் காட்சியளிக்கின்றனர்.

மேலே வந்ததும்,ஏன் தாயே! சிவபெருமான் தான் சோதிப்பதில் நிகரற்றவர்.நீயுமா? சதுரகிரிமலைப்பயணத்தில்கூட நான் இப்படி மலைத்தது இல்லை; இவ்வளவு உயரத்தில் இத்தனை ஆண்டுகளாக இருக்கிறாயே!? உனக்கு பயமே இல்லையா?என்றே அவளிடம் கேட்டேன்.அப்புறமாக சொந்த வேதனைகளை சொல்லி நிறைய வரம் வாங்கிவிட்டுத் திரும்பினோம்.

ஆரோக்கியமும் இளமையும் நிறைந்த எங்களுக்கே மலையுச்சியை அடைய 3 மணிநேரம் ஆனது.
மலையை விட்டு இறங்கும்போதும் வேகமாக ஓடி வர முடியவில்லை;மெதுவாகத்தான் வர முடிந்தது.இறங்குவதற்கும் அதே 3மணி நேரம் ஆனது.

கடல் மட்டத்திலிருந்து 4560 அடிகள் உயரத்தில் கோவில் அமைந்திருக்கிறது.இந்தக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது என விளம்பரப்படுத்துகிறார்கள்.எனக்கென்னவோ,20,000 ஆண்டுகள் பழமையானது;பார்வதி இங்கே தவம் செய்ய வந்து 2,00,000 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்றே தோன்றுகிறது.பலசித்தர்கள் வாழுமிடம் இது.

சித்தர்களின் வீடு சதுரகிரி; சித்தர்கள் சிவனை வழிபடும் இடம் திரு அண்ணாமலை;சித்தர்கள் பார்வதியான ஆதி பரப்பிரம்ம சக்தியை வழிபடுமிடம் இந்த பர்வத மலை;என்பது எனது தாழ்மையான கருத்து.பல சந்தர்ப்பங்களில் பல மனிதர்கள் இங்கே சித்தர்களை தரிசித்திருக்கின்றனர்;இனியும் தரிசிப்பார்கள்.நமக்குத் தகுதியிருந்தால் நாமும் சித்தர்களை/ஏதாவது ஒரு சித்தரை தரிசிக்கமுடியும்.
திரு அண்ணாமலையைப்போல,இந்த பர்வதமலைக்கும் கிரிவலம் உண்டு.கிரிவலதூரம் 26 கிலோமீட்டர்கள் ஆகும்.

600 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன.இப்போது மீண்டும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அனுமதியுடன் திருவல்லிக்கேணி ஸ்ரீபருவதமலை அடியார்கள் திருப்பணிசங்கம் சார்பாக திருப்பணிகள் நடைபெற இருக்கிறது.இந்தத் திருப்பணியில் பங்குகொள்ளவிரும்புவோர் கீழ்க்காணும்முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.பணம்,சிமிண்டு,ஜல்லி,செங்கல்,வர்ணம்,சிற்பவேலைக்கு கைங்கர்யம் செய்யலாம்.
திருவல்லிக்கேணிஸ்ரீபருவதமலை அடியார்கள் திருப்பணி சங்கம் பதிவு எண் 138/2009
7,VR பிள்ளைதெரு முதல் சந்து,திருவல்லிக்கேணி,சென்னை 5.

தலைவர் என்.ஆர்.தரணி செல்:99623 82601
செயலாளர் ஈ.பாண்டியன் செல்:98842 36697
பொருளாளர்கே.ஆர்.இந்திரன் செல்:98842 36757

இந்தத் திருப்பணி சங்கம் 36 அடி உயரமும்,1000கிலோ எடையுடன் கூடிய நவீன இடி தாங்கிக்கோபுரத்தை(super conductor Lightning Diverter) இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அனுமதியுடன் பர்வதமலையின் மேலே 13.2.2010 அன்று நிறுவியுள்ளனர்.

குறிப்பு:திருஅண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் போளூர் அருகில் தென்பாதிமங்கலம் என்றகிராமத்தின் எல்லைக்குள் அமைந்திருக்கிறது.மலையின் அமைப்பு கிட்டத்தட்ட சதுரகிரியின் அமைப்புப்போலவே அமைந்திருக்கிறது.சதுரகிரிக்கு வேகமாக மலையேறமுடியும்.இங்கு அப்படி முடியாது.

உலகாளும் நாயகியே பார்வதி வாழ்க !!!

Sunday, October 24, 2010

சதுரகிரியின் பெருமைகளும்,பெரியமகாலிங்கம் என்ற திருக்கையிலாயமும்

சதுரகிரியின் பெருமைகளும்,பெரியமகாலிங்கம் என்ற திருக்கையிலாயமும்


சதுரகிரியின் பெருமைகள்
விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் அமைந்திருப்பது வத்றாப் ஒன்றியம் ஆகும்.இங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தின் பெயர் தாணிப்பாறை ஆகும்.வத்ராப்பிலிருந்து காலையிலும் மாலையிலும் நகரப்பேருந்து வசதி தலா ஒருமுறை இருக்கிறது.ஆட்டோ வசதி 24 மணிநேரமும் வத்ராப்பில் கிடைக்கிறது.
தாணிப்பாறையிலிருந்து மலைக்காட்டுப்பாதை வழியாக 5 மணிநேரம் பயணித்தால் வருவதே சதுரகிரி.இந்த 5 மணிநேரத்தில் நான்கு மலைகளைக் கடந்து செல்ல வேண்டும்.
தாணிப்பாறையிலிருந்து புறப்பட்டால் எண்ணெய்க்குடம் பாறை,அத்தி ஊற்று,கோரக்குண்டா,இரட்டை லிங்கம்,சின்னப்பசுக்கடை,நாவல் ஊற்று,பெரியபசுக்கடை,பிலாவடி கருப்பசாமி கோவில் என்ற இடங்களைக் கடந்துசென்றால் சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தைச் சென்றடையமுடியும்.
சதுரகிரி பூலோகத் திருக்கையிலாயம் என்றழைக்கப்படுகிறது.
அத்திஊற்றிலிருந்து மலைப்பாதை நேர்செங்குத்தாக அமைந்திருக்கிறது.அந்த இடத்தில் ஓரிடத்தில் ஆங்கில எழுத்தான எஸ் வளைவில் பாதை வளைந்து செல்லுகிறது.லேசாக எட்டிப்பார்த்தோமானால் கீழே கிடுகிடு பாதாளம் தெரியும்.எப்படியும் சுமார் 2000 அடி கீழே தெள்ளிய ஓடை ஒன்று ஓடும்;அந்த நேர்குத்துப் பாதையைக் கடந்ததும்,ஒரு பசுவின் காலடித்தடம் தென்படும்;அதுவே காமதேனுவின் பாதத்தடம் ஆகும்.அதை வழிபட்டு சிறிது தூரம் சென்றதும்,ஒரு பெரிய மலைச்சமவெளியைக் காணலாம்.நாம் போகும் மலைப்பாதையிலிருந்து சுமார் 50 அடி கீழே இறங்கிட வேண்டும்.அப்படி இறங்கினால்,அமைந்திருப்பதுதான் கோரக்குண்டா!
இங்கே இயற்கையாகவே ஒரு கால்பந்து அளவுக்கு பல பள்ளங்கள் இருக்கும்;இந்தப் பள்ளத்தில் கோரக்கர் மூலிகை மருந்துகளையும்,மதுவையும் தயாரித்ததாகச் சொல்லுவார்கள்.
கோரக்குண்டாவில் ஒரே நேரத்தில் நூறு பேர்கள் குளிக்குமளவுக்கு அருவியும்,சுனையும்,குளமும் அமைந்திருக்கிறது.ஒவ்வொரு அமாவாசையன்றும் அருள்மிகு காளிமுத்துசுவாமிகள் ஆசிரமத்தினைச் சேர்ந்தவர்கள்காலை 10 மணி முதல் 12 மணிக்குள் தேன்,தினைமாவினால் ஒரு சிவலிங்கம் செய்து சிவமந்திரங்கள் சொல்லி வழிபட்டு,பூஜையின் முடிவில் அந்த சிவலிங்கத்தையே மீண்டும் மாவாக்கி அருட்பிரசாதமாக வழங்கிவருகின்றனர்.
கோரக்குண்டாவைக் கடந்ததும் ரெட்டைலிங்கம் வரும்;இந்தப்பாதை ஓரளவு அகலமான பாதையாக அமைந்திருக்கிறது.
போகர் 7000 என்ற புத்தகத்தில் சதுரகிரி மலைப்பிராந்தியத்தை போகர் பாடல்களாகவே விவரித்துள்ளார்.தாணிப்பாறையில் ஆரம்பித்து,சதுரகிரி சுந்தரமகாலிங்கம் வரையிலும் இருக்கும் மலைப்பகுதிகளை அங்குலம் அங்குலமாக விவரித்திருக்கிறார்.
உதாரணமாக அத்தி ஊற்றிலிருந்து தென்கிழக்கே அம்பெய்யும் தூரத்தில் கண்வர் மகரிஷி ஆசிரமம் அமைந்துள்ளது.அந்த ஆசிரமத்தின் முன்பக்கத்தில் எப்போதும் சந்தனம் வாடை கமழும்;
கண்வர் மகரிஷி ஆசிரமத்திலிருந்து மேற்கே கூப்பிடுதூரத்தில் அகத்தியரின் காட்டேஜ்போன்ற தங்குமிடம் அமைந்திருக்கிறது என புராதன லேண்ட் மார்க்காகவே போகர் பாடியிருக்கிறார்.
சதுரகிரிசுந்தரமகாலிங்கத்திலிருந்து மூன்று மணிநேரம் மலைப்பகுதிக்குள் பயணித்தால் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்;
சதுரகிரி சுந்தரமகாலிங்கத்திலிருந்து காலை 5.30 மணிக்கு அங்குள்ள மலைவாசிப் பளியர்கள் வழிகாட்டிடப் புறப்பட்டால்,மதியம் 1 மணிக்குள் பெரிய மகாலிங்கத்திற்குச் சென்றுவிடலாம்;திரும்பவும் சதுரகிரி சுந்தரமகாலிங்கத்திற்கு வர மாலை 6 மணியாகிவிடும்.அதே சமயம் அந்த ஒழுங்கற்ற மலைப்பகுதியில் காலை 5.30 முதல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்;அப்படிச்சென்றால் மட்டுமே பெரிய மகாலிங்கத்துக்குச் சென்றடைய முடியும்.வழியில் ஏராளமான பலவிதமான பழத்தோப்புக்கள் இருக்கின்றன.
பெரும்பாலானவர்களுக்கு பெரிய மகாலிங்கம் இருப்பதே தெரியாது;கேள்விப்பட்டு சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்றேஇதுவரை தெரியவில்லை;சித்தர்களும் சிவபெருமானும் வசிக்கும் இடமே இந்த பெரியமகாலிங்கம்தான் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.அந்த பெரியமகாலிங்கத்தின் அடையாளமே ஆயிரம் ஆண்டுகளுக்குக் குறையாத ஆலமரம் ஒன்று அங்கே இருக்கின்றது.அதன் விழுதுகள் ஐந்தாக விரிந்து ஒரு ஐந்துதலை நாகம் போல் மிகப் பரந்தப்பரப்பை தன்னுள் வைத்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரின் வட கிழக்கே ஒரு பெருமாள் கோவில் இருக்கிறது.அதன் பெயர் திருவண்ணாமலை;நிஜப்பெயர் திரு வண்ணான்மலை.அந்தக் கோவிலையொட்டி ஒரு சதுரகிலோ மீட்டருக்குள் தென் மேற்குத் திசையில் ஒரு குன்று அமைந்திருக்கிறது.அதற்கு நரிப்பாறை என்று பெயர்.அந்த நரிப்பாறையின் பின்புறம் ஒரு குகை அமைந்திருக்கிறது.ஒரே நேரத்தில் சுமார் 20 பேர் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய அளவுக்கு அந்த குகை அமைந்திருக்கிறது.இந்த குகைக்கு முற்காலத்தில் ஆதிசங்கரர் வந்திருக்கிறார்.இந்த குகையிலிருந்து ஓராள் நுழையுமளவுக்கு ஒரு குகைப்பாதை போகிறது.இந்த குகை சதுரகிரிக்குச் செல்லுவதாக செவிவழிச்செய்திகள் இருக்கின்றன.
இந்தக் காலத்திலும் நரிப்பாறையின் குகைக்குள் ஓரிரவு யாராலும் தங்கிட முடியாது;ஆத்ம பலம் உள்ளவர்கள் மட்டுமே தங்கி சித்தர்களை தரிசிக்க முடியுமாம்.

Thursday, August 26, 2010

girivalam

எனது பெருமதிப்பிற்குரிய ஐயாவும்,மானசீககுருவுமாகிய டாக்டர் பி.எஸ்.பி.அவர்களின் பல ஜோதிடக்கட்டுரைகளை நான் பல ஜோதிட மாத இதழ்களில் தொடர்ந்துவாசித்துவருகிறேன்.அவர்களின் ஒரேயொரு ஆன்மீக வழிகாட்டுதலால்தான் திருவண்ணாமலையின் பெருமைகளை அறிந்தேன்.




அவர்கள் கி.பி.2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த ஜோதிடபூமியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள்.



ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரியன்று வானுலகிலிருந்து பூலோகத்திற்கு(நமது பூமிக்கு) குபேர பகவான் வருகிறார்.அன்று தினப்பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் குபேரலிங்கத்திற்கு பூஜை செய்கிறார்.



பூஜையை முடித்து அன்று மாலை 6.00 மணிக்குமேல் குபேர பகவான் கிரிவலம் செல்கிறார்.

நாமும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரியன்று திருவண்ணாமலைக்கு வந்து மாலை 4.30 மணிக்கு குபேரலிங்கத்தை வந்தடைவோம்;மாலை 6.00 மணி வரை குபேரலிங்கத்திடம் நமது வேண்டுதல்கள்,கோரிக்கைகள்,பொருளாதார வளங்களைப் பற்றி வேண்டுவோம்;

மாலை 6.00 மணிக்கு மேல் குபேரலிங்கத்திலிருந்து கிரிவலம் புறப்படுவோம்.இதன்மூலம்,திரு அண்ணாமலையின் அருளும்,சித்தர்களின் ஆசியும்,குபேர சம்பத்தும் பெறுவோம்

Wednesday, August 25, 2010

sathuragiri

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக, சற்று சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்